Wednesday 12 May 2010

மனிதம், கடவுளின் அற்புதப் படைப்பு - பாகம் 3

இந்த புவியில் ஒவ்வொரு ஜீவராசியும் இதயத்தோடு ( அதாவது காற்றுப்பை என்று சொல்லப்படுவது ) பிறக்கிறது . ஜீவராசியின் இதயம் விரிந்து- சுருங்கும் செயல்பாட்டினை இடைவிடாது செயல்படுத்துகிறது . இதனை இதயத்தின் துடிப்பு என்று சொல்லுகிறோம் . இதயத் துடிப்புள்ளவரை ஒரு ஜீவனை உயிருள்ள உடலென்றும் , துடிப்பில்லை என்றால் உயிரற்ற சடலம் என்பதும் அனைவரும் அறிந்த உண்மையே .

மனிதனுடைய இதயத்திலிருக்கும் ஆசைகளை பற்றி முந்தைய பாகத்தில் எழுதியதை நினைவு கூருகிறேன். இந்த ஆசைகளுக்கு ஒரு வடிகால் கொடுக்க இறைவன் மனிதனுக்கு காற்றோடு உணர்வுகளை இணைத்து இதயத்தைக் கொடுத்திருகிறார் . இதயத்தின் உணர்வுகள் மனிதனுடைய இயற்கையான இயல்பை எடுத்துரைக்கிறது . இதய உணர்வுகள் சந்தோசம் , வேதனை , அமைதி , ரசனை ஆகியவைகளை மனிதனுக்கு அனுபவப்படுத்துகிறது . மனிதன் இந்த உணவுகளின் வழியே இயற்கையின் அழகை ரசிக்கிறான் , சந்தோசத்தில் வாய்விட்டு சிரிக்கிறான் , துயரத்தில் கண்கலங்க அழுகிறான் , வலியில் கதறித் துடிக்கிறான் . அந்தந்த சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மனிதன் வெவ்வேறு உணர்வுகளை அனுபவிக்கிறான் . இதயப்பூர்வமான உணர்வுகள் மனிதனுக்கு அறியாமையை , நல்லதொரு உறவுப் பாலத்திற்கு வழிவகுத்துக் கொடுக்கிறது . உணர்வுகளின் உறவுப்பாலம் மனிதனுடைய நித்தியமான நிலையை நிர்ணயிக்கிறது . எதற்காக இந்த மனிதப்பிறவி ? மனிதப் பிறவியால் இந்தப் புவி என்ன பலன் அடைகிறது ? போன்ற இயற்கையான கேள்விகள் நமக்குள்ளே பிறக்கின்றன . உணர்வுகளின் உறவுப்பாலம் இந்த முதல் கட்ட கேள்விக்கு தகுந்த விளக்கத்தை கொடுக்கிறது . அதாவது மனிதப் பிறவியின் நோக்கத்தை அழகாக விளக்குகிறது .

இதயத்திலிருந்து பிறக்கும் உணர்வுகள் மனிதனுக்கு ஏன் இந்த உறவுப் பாலத்தை அமைத்துக் கொடுக்கிறது . இரண்டாவது கட்ட கேள்வியாக எழும்புகிறது. ஆசைகளைக் கொண்ட இதயமுள்ள மனிதன் எதையாவது முயன்று கொண்டே இருக்கிறான் . அதாவது அவன் ஏதோ ஒரு செயலைச் செய்வதற்கு உந்தப் படுகிறான் . உணவுகளின் உறவுப்பாலம் ஒரு செயலைச் செயல்படுத்துவதற்கு மனிதனுக்கு தூண்டுகோலாக உதவுகிறது . சந்தோசம் , பாதுகாப்பு ஆகிய இரண்டையும் பெறுவதற்கு இந்த உறவுப்பாலம் கைகொடுக்கிறது . மனிதனின் வெளிப்புற வாழ்க்கையோடு சந்தோசத்தை இணைத்துப் பேசப்படலாம் . மனிதன் , பொருள் மூலமோ அல்லது நபர் மூலமோ சந்தோசத்தைப் பெறுகிறான் .

மனிதனுடைய ஆசைகளுக்கு வடிகால் கொடுக்க இந்த உணர்வுகளின் உறவுப்பாலம் பெரிதும் உதவுகிறது . அதே சமயம் இந்த உணர்வுகள் ஒரு எல்லைக்கு அப்பாற்பட்ட ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல் நடைமுறைக்கு ஏற்றமாதிரி சாதாரண வாழ்க்கையின் அவசியத்தை உணர வைக்கிறது . உணர்வுகளின் உறவுப்பாலம் மனிதனுக்கு போதுமான பாதுகாப்பை கொடுக்கத் தவறியதில்லை . இந்த பாதுகாப்பு மனிதனை ஒருபோதும் தனிமைப் படுத்தியதில்லை . அவனை எப்போதும் ஒரு துணையோடு இணைக்கிறது . இது மனிதனுக்கு சமூக இயல்பினையை மிகவும் அருமையாக உணர வைக்கிறது . அப்படி என்றால் உணர்வுகளுடைய உறவுப் பாலத்தின் அவசியத்தை மனிதன் நன்றாக அறிந்து கொள்கிறான் .

உணர்வுகள் இந்த உறவுப் பாலத்தை எவ்வாறு அமைத்துக் கொடுக்கிறது ? என்பது மூன்றாவது கட்ட கேள்வியாக தொடர்கிறது . இதற்கு பல உதாரணங்களைக் கொண்டு விளக்கலாம் . பசி எடுக்கும்போது வயிறுக்கு உணவு தேவைப்படுகிறது , அதாவது அந்தக் கணத்தில் வயிறுக்கு உணவு மட்டும் தான் தேவைப் படுகிறது , எவ்வாறு பசிக்கிற வயிறு உணவோடு இணைத்துக் கொள்கிறதோ அதுபோல மனிதனுக்கு உணர்வுகளின் உறவுப்பாலம் எப்போது தேவைப் படுகிறதோ அப்போது மனிதன் அந்த உறவுப்பாலத்தோடு இணைந்து கொள்கிறான் . மனிதனுடைய உணர்வுகள் ஒரு தொலைக்காட்சிப்பெட்டியைப் போல செயல்படுகிறது . பல சேனல்களைக் கொண்டது இந்த தொலைக்காட்சிப்பெட்டி. எந்த சேனல் மனிதனுக்கு அதிக மகிழ்ச்சியைத் தருகிறதோ அந்த சேனலை அவன் அதிகமாக விரும்பிப் பார்க்கிறான் . அதுபோலவே மனிதன் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பல்வேறு உணர்வுகளின் உறவுப்பாலத்தை உணருகிறான் . எந்த சூழ்நிலையில் அவன் உணர்வுகளை முழுமையாக அனுபவிக்கிறானோ , அவற்றையே அதிகமாக நேசிக்கிறான் . தேவைகள் மனிதனுக்கு உணர்வுகளின் உறவுப்பாலத்தின் அவசியத்தை உணர வைக்கிறது .

மனிதனுடைய இதயத்தில் ஆசைகள் பிறக்கின்றன . இந்த ஆசைகளுக்கு வடிகால் கொடுக்க இதயத்திற்குள் உணர்வுகளும் பிறக்கின்றன , இந்த ஆசை-உணர்வு சங்கமம் நல்லதொரு உறவுப்பாலத்தை உருவாக்குகிறது . ஆசைகளும் உணர்வுகளும் சேர்ந்து அதன்வழியே உருவாகிய உறவுப்பாலங்கள் ஆகியவைகள் அடங்கிய மனிதப்பிறவி கடவுளின் ஒரு அற்புதப் படைப்பே !!!

No comments:

Post a Comment